×

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

விருதுநகர் : சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் அதிபதி என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. மத்தாப்பு தயாரிப்பதற்கான மருந்து செலுத்தும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தின்போது அறையில் இருந்த 7 பேர் உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Atipati ,Enchar ,Madhapu ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு